இருட்டு வீதியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

0
12

வேறு இடத்தில்  கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் சடலம் வியாழக்கிழமை (10) கண்டெடுக்கப்பட்டதாக ஹோமாகம பொலிஸ் தெரிவித்துள்ளது.

சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞனின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயம் இருப்பதாகவும், கழுத்தில் சிறிது வீக்கம் இருப்பதாகவும், கழுத்துக்கு அருகில் இரத்தக் கறை இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்னும் திறக்கப்படாத தொடர்புடைய மாற்றுப் பாதை இரவில் மிகவும் இருட்டாக இருப்பதால், ஒரு வாகனத்தில் உடலை எடுத்துச் சென்று, வீதியோரத்தில் நிறுத்தி, இந்த இடத்தில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.