29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து!

நாடு பெரும் அதல பாதாளத்தில் விழுந்துள்ளதாகவும், அதனை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மீள்வது எளிதல்ல என்பது கசப்பான உண்மையாகும் என தெரிவித்த அவர், உண்மையை பேசி வீட்டுக்கு செல்ல வேண்டுமானாலும் அது குறித்து தான் கவலையடைய மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
ராஜகிரிய பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘நாட்டை ஆள்பவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
அவர்களே அர்ப்பணிப்பு செய்ய வேண்டும், அதற்கு எமது குழு தயாராக இருக்கிறது.
இரண்டு வருடங்களாக செயலிழந்து இருந்த அரசாங்கம் தற்போது நெருக்கடி காரணமாக தீர்வு கிடைக்குமா என எதிர்க்கட்சிகளிடம் கேட்கின்றனர். தற்போது நானும் எனது குழுவும் ஆட்சியில் இருந்திருந்தால் நாடு இவ்வாறானதொரு பாதாளத்திற்கு தள்ளப்படுவதற்கு நாம் இடமளித்திருக்கமாட்டோம்.
வரலாற்றில் எந்தவொரு எதிர்க்கட்சியும் செய்யாததை ஐக்கிய மக்கள் சக்தி செய்துள்ளது.
‘ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து ஒரு மூச்சு’ மற்றும் ‘பிரபஞ்சம்’ போன்ற வேலைத்திட்டங்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.
அன்றிலிருந்து நான் முன்கூட்டியே விடுத்த எச்சரிக்கைகள் ஏறக்குறைய உண்மையாகிவிட்டன.
இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கும் கண்ணீருக்கும் நானும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles