இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மேலும் அதிகரிக்கும் அபாயம்!

0
133

இலங்கையில், பொருளாதார நெருக்கடி காரணமாக, 6.3 மில்லியன் மக்கள், உணவுப் பாதுகாப்பற்ற நிலையை எதிர்நோக்கியுள்ளனர் என, உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டம், உணவு விவசாய ஸ்தாபனம் ஆகியவை இணைந்து முன்னெடுத்த, உணவு பாதுகாப்பு மதிப்பீட்டின் போது, இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
நெருக்கடி காரணமாக, 6.7 மில்லியன் மக்கள், போதியளவு அளவு உணவை உண்ணவில்லை.
உடனடி நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இந்த நிலை மேலும் மோசமடையும்.
நிபந்தனையற்ற உணவு உதவி, பாடசாலையில் உணவு வழங்குதல், ஊட்டச்சத்து ஆதரவு போன்றவற்றின் மூலம், 3.4 மில்லியன் மக்களை சென்றடைய உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இலங்கையின் பண வீக்கம் 64.3 வீதமாக காணப்பட்டது.
அதிகளவில் பணம் அச்சடிக்கப்பட்டமையால் ஏற்பட்ட பண வீக்கம் காரணமாக, உணவுப் பொருட்களின் விலைகள், 93.7 வீதத்தினால் அதிகரித்துள்ளன.
இலங்கையால், போதியளவு அரிசி மற்றும் ஏனைய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாவிட்டால், ஒக்டோபர் முதல் 2023 பெப்ரவரி மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில், உணவுப் பாதுகாப்பின்மை, மேலும் அதிகரிக்கலாம்.
என உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.