28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கையில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதம் கடந்த 11 நாட்களில் மாத்திரம் 971 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடுஇ இதுவரை நாடளாவிய ரீதியில் 25,891 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 9 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படிஇ டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கையும் 14 ஆக அதிகரித்துள்ளது.

அதிக டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன்இ 5,624 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர்இ அதிக டெங்கு நோயாளர்கள் யாழ்.மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன்இ 3,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 2,487 பேரும்இ கண்டி மாவட்டத்தில் 1இ986 பேரும்இ இரத்தினபுரி மாவட்டத்தில் 1,441 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 1இ372 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles