29 C
Colombo
Tuesday, April 16, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இ.போ.ச. பதுளை சாலையில் பணியாற்றும் எட்டுப்பேர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தல்

இலங்கை போக்குவரத்துச் சபையின் பதுளை சாலையில்; பணியாற்றும் உத்தியோகத்தர்கள் 8 பேரும் அவர்களின் குடும்பத்தினரும் கொரோனா தொற்று அச்சுறுத்தலால் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இ.போ.ச. பதுளை சாலை பேருந்துகளில் வழமையாகப் பயணிப்பவர்களுக்கான மாதாந்த பருவகாலச்சீட்டுக்களை வழங்குபவர் மற்றும் பேருந்து நடத்துநர்களிடமிருந்து நாளாந்தம் பணம் பொறுப்பேற்கும் அதிகாரி உள்ளிட்ட எட்டுப்பேரும், அவர்களின் குடும்பத்தினரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இத்தகவலை பதுளை மாநகர சபை பொதுச் சுகாதாரப் பணியகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளரான பொலிஸ் உத்தியோகத்தரொருவர் கொழும்பிலிருந்து இ.போ.ச. பதுளை சாலை ஊழியர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்தத் தகவல் பதுளை மாநகர சபை பொதுச் சுகாதாரப் பிரிவுக்கு கிடைத்ததையடுத்து பொதுச் சுகாதாரப் பிரிவினர் விரைந்து இ.போ.ச. பதுளை சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சுயதனிமைப்படுத்தினர்.

அத்துடன் கொரோனா தொற்றுடன் பதுளைக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என பொதுச் சுகாதாரப் பணியகத்தினர் தெரிவித்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles