ஈஸ்டர் தாக்குதலில் இறந்தவர்களை புனிதர்களாக அறிவிக்க கத்தோலிக்க திருச்சபை தீர்மானம்!

0
123

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களை புனிதர்களாக கத்தோலிக்க திருச்சபை அறிவிக்கவுள்ளது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை நாடு அனுஷ்டிக்கும் போது இதற்கான முதல்படி எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

‘ஏப்ரல் 21, 2019 அன்று தேவாலயங்களில் இறந்தவர்கள் தாங்கள் நம்பியதற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர்.

அன்று அவர்கள் கிறிஸ்துவை நம்பியதால் தேவாலயத்திற்கு வந்தனர்.

மற்ற புனிதர்களைப் போல கிறிஸ்துவை நேசித்ததால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர்.

ஒருவர் தியாகம் செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரே அவரை புனிதர் என்று பெயரிட முடியும். எனவே, ஈஸ்டர் ஞாயிறு பாதிக்கப்பட்டவர்களை இந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி புனிதர்களாக அறிவிப்பதை முன்னோக்கி நகர்வோம்.

கிறிஸ்தவம் என்பது தேவாலயங்களில் மத வழிபாடுகளில் ஈடுபடுவது மட்டுமல்ல.
நாம் நீதிக்காக நிற்க வேண்டும்.

மற்றவர்களின் நீதிக்காக நாம் பேச வேண்டும்.

இதைத்தான் திருத்தந்தை பிரான்சிஸ் திருச்சபை எவ்வாறு செயல்பட வேண்டும் என தனது திருமறையில் நமக்குக் கற்பித்துள்ளார் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.