27.6 C
Colombo
Wednesday, December 6, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஐ.தே.கவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பெரமுன பொதுச்செயலர் விளக்கம்

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என ஆளுந்தரப்பின் உறுப்பினர்களில் ஒருசிலர் குறிப்பிடுவதை கட்சியின் தீர்மானமாக கருத முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன கூட்டணி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து, தேர்தலில் போட்டியிட உள்ளதாக அரசாங்கத்தின் ஒருசில உறுப்பினர்கள் குறிப்பிடுவது, அவர்களின் தனிப்பட்ட கருத்தே தவிர கட்சியின் நிலைப்பாடு அல்ல. ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.
ஆதரவு வழங்கியுள்ள காரணத்துக்காக கட்சியின் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் பிரதான நிலைப்பாடாக உள்ளது. வெற்றியோ அல்லது தோல்வியோ கட்சியின் தனித்துவத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதை கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். தேர்தலுக்கு அஞ்சவேண்டிய தேவை எமக்கு கிடையாது. எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்வோம். தேர்தலை பிற்போடாமல் உரிய காலத்தில் நடத்துமாறு கட்சி என்ற ரீதியில் வலியுறுத்தியுள்ளோம். அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பொதுஜன பெரமுன தலையிடுவதில்லை. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பொதுஜன பெரமுனவிடமே உள்ளது. அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக பல விடயங்களில் விட்டுக்கொடுப்புடன் செயற்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.

Related Articles

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...

இலங்கைக்கு தபால் மூலம் போதைப்பொருள் அனுப்பும் போக்கு அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகளால்...

புதிய கல்வி சீர்திருத்தம்?

அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் எனவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்களின் ஆதரவுடன் கல்விக் கட்டமைப்பை முழுமையாக டிஜிட்டல்...