ஒகஸ்ட் மாதம் 6,230 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

0
92
இலங்கை கடற்படையினரால் கடந்த ஒகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது 6,230 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளின் போது, ​​இந்த சம்பவங்கள் தொடர்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு 37 மில்லியன் ரூபாவுக்கு மேல் வரி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடற்படை மதிப்பீடு செய்துள்ளது.
கடல் வழிகள் ஊடாக கடத்தப்படும் மற்றும் சட்டவிரோதமான பொருட்கள் வருவதைத் தடுக்கும் நோக்கில், நாட்டின் கரையோரப் பகுதிகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.