26 C
Colombo
Tuesday, March 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

காஜல் அகர்வால் கெளதம் கிட்சுலு திருமணம்!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவின் திருமணம் மும்பை தாஜ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நெருங்கிய சொந்தங்கள் சுமார் 50 பேர் மட்டுமே கலந்து கொண்ட அவரது திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகர்ந்துள்ளார்.

திருமணம் தொடர்பான தகவல்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்த காஜல் அகர்வாலுக்கு அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கடந்த இரு தினங்களாக வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தனது திருமணத்துக்கு முந்தைய சடங்குகளான மருதாணியிடுதல், நலுங்கு வைத்தல் போன்ற புகைப்படங்களை #kajgautkitched என்ற ஹேஷ்டேக்குடன் காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.

மும்பை தாஜ் ஹோட்டலில் உள்ள அரங்கில் திருமணத்துக்காக மிகப்பெரிய செட் போடப்பட்டு இந்த ஜோடியின் திருமணம் நடந்துள்ளது. அந்த படங்கள் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து டிரண்டாகி வருகின்றன.

தமிழில் நடிகர் விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், விஜயுடன் விவேகம், சூர்யாவுடன் மாற்றான், ஜெயம் ரவியுடன் கோமாளி உள்ளிட்ட படங்களில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். மும்பையில் பிறந்த காஜல் அகர்வால் தொடக்கத்தில் இந்தி பட உலகில் அறிமுகமாகி பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழ் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் ஒரே சமயத்தில் நடித்து வந்தார்.

தற்போது இயக்குநர் சங்கரின் இந்தியன்-2 படத்தில் முக்கிய பாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று காஜல் கூறியுள்ளார்.

Related Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

கொழும்பில் இன்று நேர்ந்த பரிதாப மரணம்!

கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் சேவையில் ஈடுபட்டிருந்த போது, மலசலகூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (27) பிற்பகல் கொழும்பு, கொட்டாஞ்சேனை...

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில், வைர விழா

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைர விழா, சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. வைர விழாவை முன்னிட்டு, இன்று காலை 9.00 மணிக்கு, கல்லூரி மைதானத்தில், மலர் வெளியீடு...