28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காரைநகரில் பொலிஸ் உத்தியோகத்தரின் சகோதரன் திருட்டு குற்றச்சாட்டில் கைது!

ஊர் காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர்  கோவளம் பகுதியில் இன்று மாலை திருட்டில் ஈடுபட்ட ஐவர் அடங்கிய கும்பல் ஒன்று அப்பகுதி  மக்களால் மடக்கி  பிடிக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் 

பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட ஐவரில் ஒருவரின் சகோதரி பொலிஸ் திணைக் களத்தில் கடமையாற்றுவதாகவும் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களுடன் குறித்த சந்தேக நபர் தொடர்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்,

சுழிபுரம் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த ஐவர் அடங்கிய இளைஞர் குழு ஒன்று இன்று காரைநகர் கோவளப்பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு நிலைகளை  திருடிய சந்தர்ப்பத்தில் அப்பகுதிமக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்

 காரைநகர் மணற்காடு அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இன்றைய தினம் கோவளப்பகுதி மக்களின் திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles