கிழக்கிலங்கையில்முதன்முறையாகவிழிப்புணர்வுஉதைப்பந்தாட்ட போட்டி

0
68

கிழக்கிலங்கையில் முதன்முறையாக விழிப்புணர்வு உதைப்பந்தாட்ட போட்டி மட்டக்களப்பு திராய்மடு விளையாட்டு மைதானத்தில்
இடம்பெற்றது.
யூபா சிறுவர் கழகத்தின் இயக்குனர் ப.தினேஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக, கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் கலந்து கொண்டார்.
‘போதையற்ற நாடும் சௌபாக்கியமான தேசம்’ எனும் தொனிப்பொருளில், நிகழ்வு இடம்பெற்றது.
சிறுவர்களூடாக சமூகத்தை விழிப்பூட்டும் நோக்கில் இவ் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இப் போட்டியில் 11 விளையாட்டு அணியினர் கலந்து கொண்டு திறமைகளை வெளிக்காட்டினர்.
இதன் போது சான்றிதழ்களும் வெற்றி கிண்ணங்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரி.மதிராஜ், நரம்பியல் விஞ்ஞானி எம். கீதாஞ்சன், சீற்ஸ்ரீலங்கா நிறுவன பணிப்பாளர் என பலர் கலந்து கொண்டனர்.