கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவும், மரநடுகையும் அம்பாறை கல்முனை ஸ்ரீ தரவைச் சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்துக்களிடையே ஏற்படும் மதமாற்றத்தினை தடுத்தல், சைவ சமயத்தின் தத்துவங்களை இலகு நடையில் சொற்பொழிவுகள் மூலம் சைவ மக்களிடை பரவச் செய்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் செயற்பட்டு வருகின்றது.
ஒன்றியத்தின் தலைவராக சிவஸ்ரீ கவி பிரமீன் சர்மாவும், பொதுச் செயலாளராக சோ.தினேஸ்குமாரும், பொருளாளராக ஜெ.மோகனும் தெரிவு செய்யப்பட்டனர்.