25 C
Colombo
Friday, December 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 87ஆக அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

அதன்படி செங்கலடி பிரதேசத்தில் ஒருவருக்கும், ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவருக்கும், கோறளைப்பற்று மத்தியை சேர்ந்த ஒருவருக்குமாக மொத்தம் மூன்று பேர் இன்று கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இறக்காமம் பகுதியில் கொழும்பின் புத்தக கடை ஒன்றில் பணிபுரிந்து தமது இல்லங்களுக்கு திரும்பியிருந்த இறுதியாக அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உள்ளவரின் தந்தையருக்கும் அவரின் சகோதரருக்கும் கடந்த 4ஆம் திகதி பெறப்பட்ட PCR மாதிரிகளின் முடிவுகள் நேற்று இரவு கிடைக்கப் பெற்றதை அடுத்து இறக்காமம் பகுதியில் மேலும் இரு நோயாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு இன்று காலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மட்டக்களப்பில் 47 பேரும், திருகோணமலை 13 பேரும் , கல்முனை 20 பேரும் ,அம்பாறை 7 பேரும் கொரோனா தொற்றில் இனம் கணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மக்கள் அவதானமாக செயற்படுமாறும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு தெரிவிக்குமாறும், சன நடமாட்டத்தை குறைக்குமாறும் இயலுமானவரை வீட்டில் இருக்குமாறும் கிழக்கு மாகாண மக்களுக்கு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உரிய பிரதேசங்களின் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு ஒரு மாத கால பாராளுமன்றத் தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களின் நூலகத்திற்கு அருகில் வாக்குவாதத்தில்...

நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே அமைச்சரின் பதவி பறிப்பு!

நித்தியானந்தாவின் 'கைலாசா' கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை...

3 நாட்களுக்கு முன்னர் காணாமல்போன யுவதி! குடும்பத்தினருக்கு கிடைத்த சோகமான செய்தி!

வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் யுவதியின் சடலம்இ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு ஒரு மாத கால பாராளுமன்றத் தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களின் நூலகத்திற்கு அருகில் வாக்குவாதத்தில்...

நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே அமைச்சரின் பதவி பறிப்பு!

நித்தியானந்தாவின் 'கைலாசா' கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை...

3 நாட்களுக்கு முன்னர் காணாமல்போன யுவதி! குடும்பத்தினருக்கு கிடைத்த சோகமான செய்தி!

வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் யுவதியின் சடலம்இ...

ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கப் போவதில்லை-எலான் மஸ்க்

அமெரிக்காவில் வசித்து வரும் எலான் மஸ்க்,`நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், வெள்ளை மாளிகையில் நடைபெறும் மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாட்டில்...

இலாபம் பெறாவிடின் இ.போ.சவை தனியார் மயமாக்க நேரிடலாம்!

2024ஆம் ஆண்டுக்குள் இலங்கை போக்குவரத்து சபை இலாபம் ஈட்டாவிடின் அதனை தனியார் மயமாக்க நேரிடும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன...