32 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் சாவகச்சேரி திடீர் விபத்து பிரிவு

கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் சாவகச்சேரி திடீர் விபத்து பிரிவு
மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க முன்னே யன்னல்கள் கழரும் நிலை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் பறவைகளின் சரணாலயமாக மாறிவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் பெருந்தொகை நிதி செலவில் கட்டப்பட்ட குறித்த வைத்தியசாலை இரண்டு மாடிகள் கொண்டதாக மக்கள் வரிப்பணத்திலிருந்து குறித்த கட்டடம் அமைக்கப்பட்டது
அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த வைத்தியர் எஸ். சத்தியலிங்கத்தின் தூண்டுதலின் பேரில் சாவகச்சேரி விபத்து பிரிவு கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ஒரு தொகை பணம் வவுனியா பொது வைத்தியசாலையின் தீடீர் விபத்தும் பிரிவு அமைக்க மாற்றப்பட்டதன் விளைவே குறித்த சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அமைந்துள்ள குறித்த கட்டடம் முழுமை பெறாமல் இருப்பதாக ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர் 
வவுனியா பொது வைத்தியசாலையில் இடவசதிகள் இல்லாத சூழ்நிலையில் மத்திய அரசினால் வரைந்து அனுப்பப்பட்ட கட்டட வரைபடத்தை மாற்றி திடீர் வைத்திய பிரிவை நிறுவுவதற்காக தனது அதிகாரத்தை பயன்படுத்தி தான் பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியாவில் மூன்று தளங்களைக் கொண்ட கட்டடமாக கட்டப்பட்டதாக குற்றச்சாட்டுக்களும் எழுகிறது.
மக்கள் பயன்பாட்டிற்கென மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு  சாவகச்சேரி யில் அமைக்கப்பட்ட குறித்த  கட்டடம் கம்பீரமாக காட்சி அளித்தாலும் இரவில் பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் சரணாலயமாக மாறி வருவதோடு குறித்த கட்டடத்தில் போடப்பட்ட பொருத்தப்பட்டுள்ள யன்னல் கதவுகள் கழன்று விழும்  துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது ஆகவே குறித்த வைத்தியசாலையில் அமைந்துள்ள கட்டடத்தை பூரணப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்கு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் தத்தமது  கடமைகளையும் பொறுப்புகளையும்  உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Articles

ரமழான் நோன்புக்கு இலவச கோதுமை மாவுக்கு மக்கள் மோதல்: 4 பேர் பலி

ரமழான் நோன்பு கடைப்பிடித்து வரும் பாகிஸ்தானில் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கோதுமை மாவு வழங்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவரின் இறுதிக்கிரியை

அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவரும் சுவாட் அமைப்பின் தலைவருமான வ.பரமசிங்கம் நேற்றிரவு விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது இறுதிக் கிரியைகள்இன்று இடம்பெற்றன.கடமையின் நிமித்தம் கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது,...

சுகாதார விதிகளை மீறி உணவு விற்பனை:வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

அம்பாறை கல்முனையில், னித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்த 3 உணவகங்களுக்கு தண்டப்பணம்விதிக்கப்பட்டுள்ளது.சுகாதார விதிமுறை மீறிய உணவங்கள் தொடர்பான வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ரமழான் நோன்புக்கு இலவச கோதுமை மாவுக்கு மக்கள் மோதல்: 4 பேர் பலி

ரமழான் நோன்பு கடைப்பிடித்து வரும் பாகிஸ்தானில் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கோதுமை மாவு வழங்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவரின் இறுதிக்கிரியை

அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவரும் சுவாட் அமைப்பின் தலைவருமான வ.பரமசிங்கம் நேற்றிரவு விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது இறுதிக் கிரியைகள்இன்று இடம்பெற்றன.கடமையின் நிமித்தம் கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது,...

சுகாதார விதிகளை மீறி உணவு விற்பனை:வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

அம்பாறை கல்முனையில், னித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்த 3 உணவகங்களுக்கு தண்டப்பணம்விதிக்கப்பட்டுள்ளது.சுகாதார விதிமுறை மீறிய உணவங்கள் தொடர்பான வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில்...

சிலியில் முதன்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பரவல்

தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் முதல் முறையாக மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட...

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு – இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகளை; கலைக்கும் இராணுவ ஆட்சியாளர்களின் முடிவை அவுஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயக தலைவர்...