29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொட்டகலையில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் பகுதியில் ஒருவருக்கும் , கொட்டகலை வூட்டன் பகுதியில் ஒருவருக்கும் கொரோன தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேசத்திற்கு பொருப்பான பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் கொட்டகலை பகுதியில் 15 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இருவருக்கு கொரோனா தொற்று உருத்திசெய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான இரண்டு பேரும் பேலியாகொட மீன்சந்தையில் தொழில்புறிந்து வந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதோடு இருவருக்கும் 45, 46 வயதினை கொண்டவர்கள் என தெரிவித்தனர்.

இவர்களோடு தொடர்பு வைத்திருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை சுயதனிமைபடுத்தல் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதுடன் தொற்றுக்குள்ளான இருவரையும் அவரது குடும்பத்தாரையும் சுய தனிமைக்குற்படுத்தவுள்ளனர்.

கொரோனா தொற்று பரவலையடுத்து கொட்டகலையில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூட கொட்டகலை பிரதேசசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles