29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா தொற்றாளருடன் பஸ்ஸில் யாழ் வந்த 6 பயணிகள் தலைமறைவு!

Top Menu

Thinakkural

Thinakkural

Sunday ,01 Nov 2020,02:34:38am Today’s E-Paper

கொரோனா தொற்றாளருடன் பஸ்ஸில் யாழ் வந்த 6 பயணிகள் தலைமறைவு; தேடும் பணி பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Bharati November 1, 2020கொரோனா தொற்றாளருடன் பஸ்ஸில் யாழ் வந்த 6 பயணிகள் தலைமறைவு; தேடும் பணி பொலிஸாரிடம் ஒப்படைப்பு2020-11-01T07:41:40+05:30

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

“யாழ்ப்பாணத்துக்கு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்பட்ட என்.சி.ஜி என்ற பெயர் கொண்ட டபிள்யூ.பி.என்.சி 8760 என்ற இலக்கமுடைய பஸ்ஸில் பயணித்தவர்கள் சமூக அக்கறையுடன் உடனடியாக சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன் பஸ் சேவை நிறுவனத்திடமிருந்து பயணித்தவர்களின் தொலைபேசி இலக்கம் பெறப்பட்டு சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் நேற்று ஈடுபட்டனர். அவ்வாறு 37 பயணிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

அத்துடன், சாரதியும் நடத்துநரும் கொழும்பில் தங்கியுள்ள நிலையில் சுயதனிமைப்படுத்தப்பனர். எனினும் அந்த பஸ்ஸில் பயணித்த 6 பேர் அலைபேசியை நிறுத்தி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles