31.3 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 400 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் நேற்றைய தினம் மேலும் 400பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 970 ஆக உயர்ந் துள்ளது.

அதன்படி, திவூலபிட்டி – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9492 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோயில் பிரிவு தெரி வித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5ஆயிரத்து 755 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 467 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந் துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles