32 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள்

கொரோனா தொற்று காரணமாக இன்று (24) காலை உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குளியாப்பிட்டி, உனலீய பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான ஆண் நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இருதய நோயாளர் என தெரிவிக்கப்படுகிறது.

அதற்காக சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கடந்த 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 16 ஆம் திகதி அவரின் நோய் நிலைமை தீவிரமானதால் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிக்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரஹாத் வேரவத்த தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles