27 C
Colombo
Tuesday, October 3, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் ஐவர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் ஐவர் உயிரிழந்தனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் கொரோனா தொற்றhல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

பெண்கள் மூவர் மற்றும் ஆண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 46 வயது நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 58 வயது பெண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 73 வயது வயோதிபப் பெண் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 74 வயது முதியவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

Related Articles

யாழில் நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இன்றையதினம் ...

பேக்கரி உணவு பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்சார கட்டணமும் அதிகரிக்கப்படும் நிலையில், பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார். காலியில் நேற்று...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

யாழில் நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இன்றையதினம் ...

பேக்கரி உணவு பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்சார கட்டணமும் அதிகரிக்கப்படும் நிலையில், பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார். காலியில் நேற்று...

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் 47 சதவீதமான முறைப்பாடுகளுக்கு 2 வருடங்கள் கடந்தும் தீர்வில்லை

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 47 சதவீதமான முறைப்பாடுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லையென கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. சிறுவர்...

சீரற்ற வானிலை காரணமாக 25863 பேர் பாதிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்த...