27 C
Colombo
Thursday, September 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்கு ஏன்?

கொழும்பின் பல பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குசட்டம் குறித்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஆராயப்படும்,இந்த பகுதிகளில் கொரோனா ஆபத்து குறைவடைந்த பின்னரே ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பின் பல பகுதிகளில் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,இவர்கள் தற்போது மிகவேகமாக பரவிவரும் பேலியகொடை மீன்சந்தை தொற்றுடன் தொடர்புடையவர்கள் எனவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
பொரளையில் பல நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,புறக்கோட்டை கோட்டை பகுதிகளில் முக்கிய வர்த்தக தளம் என்பதால் அங்கும் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

புறக்கோட்டையிலும் கொழும்பிலும் சில மிகவும் ஆபத்தான பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,வர்த்தக நோக்கங்களிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமிது,இதன் காரணமாகவே மேலதிக பரவலை தடுப்பதற்காக ஊரடங்கினை பிறப்பித்துள்ளோம் என அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
மூன்று நாட்களுக்கு ஒரு முறை நிலைமையை அதிகாரிகள் ஆராய்வார்கள், நோய் பரவல் தணிந்தால் ஊரடங்கினை நீக்குவார்கள்,ஊரடங்கு நடைமுறையில் உள்ள பகுதிகளில் பிசிஆர் சோதனைகள் இடம்பெறும் நோயாளிகள் அடையாளம் காணப்படுவார்கள்,மக்கள் அதிகமாக காணப்படும் இந்த பகுதிகளில் நோயாளர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை இடம்பெறும் எனவும் அரச தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பின் ஏனைய பகுதிகளில் ஊரடங்கினை அமுல்படுத்துவதற்கான திட்டம் எதுவுமில்லை, குறிப்பிட்ட ஒரு பகுதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால் அந்த பகுதியில் உடனடியாக ஊரடங்கினை அறிவிப்போம் எனவும் அரச தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

‘நபிகளாரை நேசிப்போம்- மீலாத் விழா’ அம்பாறை சாய்ந்தமருதில் இடம்பெற்றது

அம்பாறை சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீடம் நடத்திய 'நபிகளாரை நேசிப்போம் - மீலாத் விழா' நிகழ்வுகள் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரியூ.எல்.எம். ரிம்ஸானின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா...

மட்டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மட்;டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.வி.எம்.எஸ் எனப்படும் கட்புல ஊடறு தொழில் நுட்ப கருவியின் கட்டணம், துறைமுகத்தில் தங்குமிடம் பற்றாக்குறை மற்றும் ஜஸ்...

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

‘நபிகளாரை நேசிப்போம்- மீலாத் விழா’ அம்பாறை சாய்ந்தமருதில் இடம்பெற்றது

அம்பாறை சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீடம் நடத்திய 'நபிகளாரை நேசிப்போம் - மீலாத் விழா' நிகழ்வுகள் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரியூ.எல்.எம். ரிம்ஸானின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா...

மட்டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மட்;டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.வி.எம்.எஸ் எனப்படும் கட்புல ஊடறு தொழில் நுட்ப கருவியின் கட்டணம், துறைமுகத்தில் தங்குமிடம் பற்றாக்குறை மற்றும் ஜஸ்...

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

அம்பாறை சாய்ந்தமருதில் தேசிய மீலாத்விழா நிகழ்வுகள்

அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...