கொழும்பு மாநகர சபை உறுப்பினருக்கு கொரோனா தொற்று

0
437

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி மாநகரசபை உறுப்பினர்களுக்கான கூட்டம் கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.குறித்த கூட்டத்தில் மேற்படி தொற்றுக்குள்ளான உறுப்பினர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உறுப்பினர் கொழும்பு வடக்கைச் சேர்ந்தவர் எனவும் அவர் தற்போது ஐ டி எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.