முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத சில காரணங்களினால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் பதவியை தான் இராஜினாமா செய்வதாக சுகீஸ்வர பண்டார, தெரிவித்துள்ளார்.