சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!

0
195

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று காணொளி தொழிநுட்பம் வழியாக இந்நிகழ்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி பெலியத்த – புவக்தண்டாவ தம்மபால பெண்கள் பாடசாலை, பிபிலை யசோதரா மகளிர் வித்தியாலயம், தொம்பே தேவி பாலிகா வித்தியாலயம், கேகாலை ஸ்வர்ண ஜெயந்தி மகா வித்தியாலயம், தங்கொடுவ பௌத்த பெண்கள் பாடசாலை மற்றும் ஏனைய சில பாடசாலைகள் இதில் அடங்கும்.
அதற்கமைய நாட்டில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 495 ஆக அதிகரிக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.