கொழும்பில் இருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றின் ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட ஊடக நிறுவனத்தின் ஊழியர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இத் தொலைக்காட்சி சேவையின் நேரடி நிகழ்ச்சிகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.