சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று அடையாள பணிப்பகிஷ;கரிப்பு: மட்டு.போதனா வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு

0
65

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று நாடளாவிய ரீதியில், முன்னெடுத்த அடையாள பணிப்பகிஷ;கரிப்பு போராட்டத்தால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
சுகாதார தொழிற்சங்கத்தினர், 4 மணித்தியாலங்களுக்கு சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று காலை ஈடுபட்டிருந்தனர்.
பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.
இன்றைய தினம் தமது நியாயமான கோரிக்கைக்கு சாதகமான பதில்கள் வழங்காவிட்டால் நாளை முதல் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன்காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு சுகாதார அமைச்சும் அரசாங்கமுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் போராட்டத்தில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
போராட்டம் காரணமாக நீண்டதூரத்திலிருந்து கிளினிக் மற்றும் சிகிச்சைகளுக்காக வந்த நோயாளர்கள் மருந்துக்களைப் பெறுவதற்கு நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையேற்பட்டது.