அளுத்கமையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், வஸ்கடுவ கொஸ்கஸ் சந்தியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்துடன் மோதியதில், சுற்றுலாப் பயணிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்ததுடன், தொடருந்தும் சேதமடைந்ததுள்ளதாக கூறப்படுகிறது.