சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான ஜனாதிபதியிடமிருந்து விருது பெற்ற காத்தான்குடியைச் சேர்ந்த பாத்திமா பஹ்மி சுக்ரி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று கௌரவிக்கப்பட்டார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பல்சுவை வசந்தம் செயலமர்வு தொடரின் இறுதி நிகழ்வு இன்று இடம் பெற்றது. உதவி பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ் சில்மியா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வின்போதே, ஜனாதிபதி விருதைப் பெற்றுக்கொண்ட பாத்திமா பஹ்மி சுக்கிரி கௌரவிக்கப்பட்டார்.