32 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

டிரம்பின் தனிப்பட்ட செய்தி ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதியை சந்தித்தவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட செய்தியொன்றை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இலங்கை பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது மைக்பொம்பியோ தான் இலங்கை ஜனாதிபதியுடன் சில நிமிடங்கள் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதியின் தனிப்பட்ட செய்தியை மைக்பொம்பியோ பகிர்ந்துகொண்டுள்ளார்.

டிரம்ப் நிர்வாகம் சிறிய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் விதத்தில் தனது வெளிவிவகார கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொள்கின்றது என மைக்பொம்பியோ ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பெரிய நாடுகளில் இருந்து தனது கவனத்தை சிறிய நாடுகளை நோக்கி திருப்பியுள்ளது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் நெருக்கமாக இணைந்து செயலாற்றுவது குறித்து அமெரிக்கா ஆர்வமாகவுள்ளது என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ இலங்கையில் அமெரிக்க நிறுவனங்களை முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏதாவது விசேட தொழில்துறைக்கு அமெரி;க்காவின் உதவி தேவைப்படுகின்றதா என மைக்பொம்பியோ ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.

நாட்டின் விவசாய துறையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாநிலமான கன்சாஸ் மூலம் அரசியலில் நுழைந்த தனக்கு நாட்டிற்கு பேண்தகு விவசாய தொழில்துறையின் முக்கியத்துவம் தெரியும் என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இராணுவபின்னணியை கொண்ட மைக்பொம்பியோ ஜனாதிபதியின் இராணுவ அனுபவங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார் ,  ஜனாதிபதி தனது வாழ்நாளில் அமெரிக்காவில் இராணுவபயிற்சி எதனையாவது பின்பற்றியிருக்கின்றாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி தான் அமெரிக்காவின் போர்ட் பெனிங் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்றதாக தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட போர்ட் பெனி;ங் கல்லூரிக்கு மைக்பொம்பியோவும் சென்றுள்ளார்.

பொதுவான விருப்பங்கள் காரணமாக நட்புறவை மேலும் வளர்த்துக்கொண்ட மைக்பொம்பியோ ஜனாதிபதியிடன் தொடர்ந்தும் தொடர்பிலிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் இரு நாடுகளிற்கும் இடையிலாக அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

ரமழான் நோன்புக்கு இலவச கோதுமை மாவுக்கு மக்கள் மோதல்: 4 பேர் பலி

ரமழான் நோன்பு கடைப்பிடித்து வரும் பாகிஸ்தானில் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கோதுமை மாவு வழங்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவரின் இறுதிக்கிரியை

அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவரும் சுவாட் அமைப்பின் தலைவருமான வ.பரமசிங்கம் நேற்றிரவு விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது இறுதிக் கிரியைகள்இன்று இடம்பெற்றன.கடமையின் நிமித்தம் கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது,...

சுகாதார விதிகளை மீறி உணவு விற்பனை:வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

அம்பாறை கல்முனையில், னித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்த 3 உணவகங்களுக்கு தண்டப்பணம்விதிக்கப்பட்டுள்ளது.சுகாதார விதிமுறை மீறிய உணவங்கள் தொடர்பான வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ரமழான் நோன்புக்கு இலவச கோதுமை மாவுக்கு மக்கள் மோதல்: 4 பேர் பலி

ரமழான் நோன்பு கடைப்பிடித்து வரும் பாகிஸ்தானில் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கோதுமை மாவு வழங்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவரின் இறுதிக்கிரியை

அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவரும் சுவாட் அமைப்பின் தலைவருமான வ.பரமசிங்கம் நேற்றிரவு விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது இறுதிக் கிரியைகள்இன்று இடம்பெற்றன.கடமையின் நிமித்தம் கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது,...

சுகாதார விதிகளை மீறி உணவு விற்பனை:வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

அம்பாறை கல்முனையில், னித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்த 3 உணவகங்களுக்கு தண்டப்பணம்விதிக்கப்பட்டுள்ளது.சுகாதார விதிமுறை மீறிய உணவங்கள் தொடர்பான வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில்...

சிலியில் முதன்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பரவல்

தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் முதல் முறையாக மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட...

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு – இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகளை; கலைக்கும் இராணுவ ஆட்சியாளர்களின் முடிவை அவுஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயக தலைவர்...