32 C
Colombo
Thursday, April 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருகோணமலையில் தவறான முடிவெடுத்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர்! – சிறுமி மரணம்

திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தவறான முடிவெடுத்த நிலையில் 16 வயது சிறுமி உயிரிழந்ததாக திருகோணமலை பொது வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தவறான முடிவெடுத்த தாய் உட்பட 5 பேரையும் இன்று காலை 9.20 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் என். விதூசிகா என்ற 16 வயது சிறுமி உயிரிழந்தார்.

என். நாகேஸ்வரி (31-வயது) என்.வைஸ்னவீ (12-வயது) என். ஐஸ்வர்யா (08-வயது) மற்றும் என். கஜவீர் (02-வயது) ஆகியோர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் தவறான முடிவெடுத்ததற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. பூசகர் ஒருவரின் மனைவி பிள்ளைகளே இவ்வாறு தவறான முடிவெடுத்ததாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles