29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

துரையப்பா மைதானம்விரைவில் தரமுயர்த்தப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வடக்கின் சிறந்த உதைபந்தாட்ட மைதானமாக விரைவில் தரமுயர்த்தப்படவுள்ளதாக இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்,

இன்று காலை யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தினை பார்வையிட்டதோடு குறித்த விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ச வடக்கில் சிறந்த ஒரு உதைபந்தாட்ட மைதானம் ஆக தற்போது யாழ் துரையப்பா மைதானம் திகழ்கின்றது எனினும் எதிர்வரும் ஆண்டுகளுக்குள் குறித்த மைதானமானது சர்வதேச தரத்திலான ஓடுபாதை அமைக்கப்படவுள்ளதோடு சர்வதேச தரத்தை ஒத்த வகையில் குறித்த மைதானத்தை இந்த அரசாங்கம் புனரமைக்கவுள்ளது.

அத்தோடு இலங்கை பூராகவும் உதைபந்தாட்ட கழகங்களை நாங்கள் புதிதாக ஆரம்பிக்கவுள்ளோம் அதேபோல யாழ்ப்பாணத்திலும் புதிதாக கழகம் உருவாக்கப்படவுள்ளது அத்தோடு துரையப்பா விளையாட்டு மைதானத்தில் உள்ளக அரங்கில் ஜிம் சென்டர் ஒன்றையும் விரைவில் ஆரம்பிப்பதற்கு நாங்கள் எண்ணியுள்ளோம் அதனையும் தயார் படுத்துவதன் மூலம் ஏனைய மாவட்டங்களை போல வடக்கு இளைஞர்களும் தமது உதைபந்தாட்ட திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்த அரசு குறித்த முயற்சிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles