நாட்டில் இதுவரை 273 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதில் மேல் மாகாணத்தில் மட்டும் 180 பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
257 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் 1,302 பொலிஸ் அதிகாரிகள் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர்.
இதேவேளை, நேற்று பொரளை பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் 56 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.