நாட்டில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : பிரசாத் ரணவீர

0
246

நாட்டில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், சுமார் 250 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், தொழுநோய் கட்டுப்பாட்டு செயலணி பணிப்பாளர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். 2021 முதல் 2022 வரையில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட, 14 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் 250 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை கருத்திற்கொள்ளும் போது, நாட்டில் 14 வீதமானோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானோர், கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், 25 வீதமான தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 3 வருடங்களுடன் ஒப்பிடும் போது, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தொழுநோயின் அடிப்படை அறிகுறியான, குழந்தைகளின் தோலின் நிறத்தை விட குறைவான புள்ளிகள் இருந்தால், அல்லது அந்த புள்ளிகளில் உணர்வின்மை அல்லது கை கால்களில் உணர்வின்மை இருந்தால், அருகிலுள்ள தோல் மருத்துவ மனைக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். அங்கு உங்கள் பிள்ளைகளுக்கு, தொழுநோய் இருக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்டறியலாம். என தொழுநோய் கட்டுப்பாட்டு செயலணி பணிப்பாளர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.