30 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டில் மருந்து வகைகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை

சிலர் குற்றம்சாட்டும் வகையில் நாட்டில் மருந்து வகைகளுக்கு எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

8 முதல் 10 மாத காலப்பகுதிக்குத் தேவையான போதுமானளவு மருந்து வகைகள் நாட்டில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் மருந்து வகைகளைத் தயாரிப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.எனவே எதிர்காலத்தில் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதைக் குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles