27 C
Colombo
Thursday, September 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புக்கள் விரைவில் நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ்

நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர்ப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பது தொடர்பில் ஏறகனவே அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னும் சில வருடங்களில் நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் அக்குழுவின் தலைவர் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் இன்று (06.11.2020) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே அமைச்சர் டக்ளஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது.

கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப தேசிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு குழுவான கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக் குழுவின் இன்றைய கூட்டத்தில், நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளரால் தமது பிரதேசத்திற்கான போக்குவரத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்ட நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்குப் பூரணமாக நிதி வழங்கப்படாமையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் கருதி, இந்த வீடுகளுக்கான மீதித் தொகையை வழங்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளதாக வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுரத்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வீடமைப்புத் திட்டங்கள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட காணிகளில் அமைக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எஞ்சிய தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அமைச்சர் டக்ளஸ், அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த அறிவுறுத்தலை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கும் வேலைத் திட்டத்தை விரைவில் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுத் தலைவர் அமைச்சர் ஜோன்ஸ்டன், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 3000 வீடுகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4000 வீடுகளும் மின்சார இணைப்பு இன்றி காணப்படுகின்றன.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

‘நபிகளாரை நேசிப்போம்- மீலாத் விழா’ அம்பாறை சாய்ந்தமருதில் இடம்பெற்றது

அம்பாறை சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீடம் நடத்திய 'நபிகளாரை நேசிப்போம் - மீலாத் விழா' நிகழ்வுகள் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரியூ.எல்.எம். ரிம்ஸானின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா...

மட்டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மட்;டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.வி.எம்.எஸ் எனப்படும் கட்புல ஊடறு தொழில் நுட்ப கருவியின் கட்டணம், துறைமுகத்தில் தங்குமிடம் பற்றாக்குறை மற்றும் ஜஸ்...

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

‘நபிகளாரை நேசிப்போம்- மீலாத் விழா’ அம்பாறை சாய்ந்தமருதில் இடம்பெற்றது

அம்பாறை சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீடம் நடத்திய 'நபிகளாரை நேசிப்போம் - மீலாத் விழா' நிகழ்வுகள் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரியூ.எல்.எம். ரிம்ஸானின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா...

மட்டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மட்;டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.வி.எம்.எஸ் எனப்படும் கட்புல ஊடறு தொழில் நுட்ப கருவியின் கட்டணம், துறைமுகத்தில் தங்குமிடம் பற்றாக்குறை மற்றும் ஜஸ்...

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

அம்பாறை சாய்ந்தமருதில் தேசிய மீலாத்விழா நிகழ்வுகள்

அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...