பழுதடைந்த மீன்களை விற்பனை செய்த, வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0
469

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட, களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட அழுகிய மீன்கள்
அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகரால் பறிமுதல் செய்யப்பட்டு, எரியூட்டி அழிக்கப்பட்டன.


76 கிலோ கிராம் அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பழுதடைந்த மீன்களை விற்பனை செய்த 2 வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத்தாக்கல்
செய்துள்ளதாகவும், மேலும் 6 வியாபாரிளுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், களுவாஞ்சிகுடிப் பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


புகையிலை மற்றும் மதுசார விற்பனை சட்டத்திற்கு முரணான வகையில், புகையிலையை வெளிக்காட்டி விற்பனை செய்த வியாபாரியிடமிருந்து 11 கிலோ கிராம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு, எரியூட்டி அழிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.