32 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரதமரின் உலக நகரங்கள் தின செய்தி

இலங்கையர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த நகரம் மற்றும் மிகச் சிறந்த வாழ்விற்காக உலக நகரங்கள் தினமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக அடிப்படையில் நகர்புறத்தில் மேற்கொள்ளப்படும் அடிப்படை சேவைகளின் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி உலக நகரங்கள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதற்கமைய 2014ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஒக்டோபர் 31ஆம் திகதி உலக நகரங்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

உலகளாவிய நகரமயமாக்கல் தொடர்பில் சர்வதேச சமூகத்தினர் கொண்டுள்ள ஆர்வத்தை மேம்படுத்தல், வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளல் மற்றும் நகரமயமாக்கலின் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் போன்று நிலையான நகர்ப்புற அபிவிருத்தியில் பங்களிப்பு செய்தல் என்பன இத்தினத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

´மிகச் சிறந்த நகரம் மற்றும் மிகச் சிறந்த வாழ்க்கை´ என்பதே உலக நகரங்கள் தினத்தின் பொதுவான கருப்பொருளாகும். நிலையான நகர்ப்புற அபிவிருத்தியின் ஊடாக நகரில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். கிராமம் மற்றும் நகரம் இடையே சமநிலையை பேணி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் போது, நகர அபிவிருத்தி என்பது ஒரு மையப்படுத்தப்பட்ட அபிவிருத்தி கோட்பாடாகும்.

அனைத்து காரணிகளும் உள்ளடக்கப்பட்ட நகரமொன்றுக்குள் மனிதனின் வாழ்வு எளிதாக்கப்படும். அதேபோன்று அனைத்து தேவைகளும் பூரணப்படுத்தப்படும். நகர்ப்புறத்தை அழகுபடுத்தல், வீடமைப்பு திட்டங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்களின் ஊடாக நாம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் நகர்ப்புற அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கினோம். நாட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதிலிருந்து அப்பால் சென்று நாடளாவிய ரீதியில் நகரங்களுக்கிடையே சமமான அபிவிருத்தியை ஏற்படுத்தும் சுபீட்சமான நோக்கை நாம் ஆரம்பித்தோம்.

நகரமயமாக்கலின் சவால்களுக்கு முகங்கொடுத்து அதற்கு தேவையான நிலையான நகர்ப்புற அபிவிருத்தியில் பங்களிப்பு செய்வதற்கு கைக்கோர்க்குமாறு உலக நகரங்கள் தினமான இன்று நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் என்ற வகையில் நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

நகரமயமாக்கலின் நிலையான அபிவிருத்தி நோக்கங்களை அடைவதன் மூலம் அனைவருக்கும் வளமான எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன்.

Related Articles

சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கின்றது சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி குறித்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் இன்று சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர். இலங்கைக்கு எந்த...

கொழும்பில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

கொழும்பு - ஹோமாகமவில் பாடசாலை மாணவி ஒருவரை தாக்கிய வகுப்பாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர் பனாகொட,...

U20 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை நடத்தும் உரிமையை இந்தோனேஷியா இழந்தது

20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் உரிமை இந்தோனேஷியாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும் இப்போட்டிகளில் பங்குபற்றுவது இந்தோனேஷியாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கின்றது சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி குறித்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் இன்று சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர். இலங்கைக்கு எந்த...

கொழும்பில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

கொழும்பு - ஹோமாகமவில் பாடசாலை மாணவி ஒருவரை தாக்கிய வகுப்பாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர் பனாகொட,...

U20 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை நடத்தும் உரிமையை இந்தோனேஷியா இழந்தது

20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் உரிமை இந்தோனேஷியாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும் இப்போட்டிகளில் பங்குபற்றுவது இந்தோனேஷியாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மே 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

திறைசேரி செயலாளருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் தாக்கல்...

ஆங்கில மொழி மூலமான தொடர்பாடலை அதிகரிக்கும் செயற்றிட்டம் யாழில் ஆரம்பம்

அகில இலங்கை ரீதியாக ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் நோக்கில், முன்னெடுக்கப்படும் செயற்திட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.