27 C
Colombo
Thursday, September 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரதமரின் உலக நகரங்கள் தின செய்தி

இலங்கையர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த நகரம் மற்றும் மிகச் சிறந்த வாழ்விற்காக உலக நகரங்கள் தினமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக அடிப்படையில் நகர்புறத்தில் மேற்கொள்ளப்படும் அடிப்படை சேவைகளின் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி உலக நகரங்கள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதற்கமைய 2014ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஒக்டோபர் 31ஆம் திகதி உலக நகரங்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

உலகளாவிய நகரமயமாக்கல் தொடர்பில் சர்வதேச சமூகத்தினர் கொண்டுள்ள ஆர்வத்தை மேம்படுத்தல், வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளல் மற்றும் நகரமயமாக்கலின் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் போன்று நிலையான நகர்ப்புற அபிவிருத்தியில் பங்களிப்பு செய்தல் என்பன இத்தினத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

´மிகச் சிறந்த நகரம் மற்றும் மிகச் சிறந்த வாழ்க்கை´ என்பதே உலக நகரங்கள் தினத்தின் பொதுவான கருப்பொருளாகும். நிலையான நகர்ப்புற அபிவிருத்தியின் ஊடாக நகரில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். கிராமம் மற்றும் நகரம் இடையே சமநிலையை பேணி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் போது, நகர அபிவிருத்தி என்பது ஒரு மையப்படுத்தப்பட்ட அபிவிருத்தி கோட்பாடாகும்.

அனைத்து காரணிகளும் உள்ளடக்கப்பட்ட நகரமொன்றுக்குள் மனிதனின் வாழ்வு எளிதாக்கப்படும். அதேபோன்று அனைத்து தேவைகளும் பூரணப்படுத்தப்படும். நகர்ப்புறத்தை அழகுபடுத்தல், வீடமைப்பு திட்டங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்களின் ஊடாக நாம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் நகர்ப்புற அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கினோம். நாட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதிலிருந்து அப்பால் சென்று நாடளாவிய ரீதியில் நகரங்களுக்கிடையே சமமான அபிவிருத்தியை ஏற்படுத்தும் சுபீட்சமான நோக்கை நாம் ஆரம்பித்தோம்.

நகரமயமாக்கலின் சவால்களுக்கு முகங்கொடுத்து அதற்கு தேவையான நிலையான நகர்ப்புற அபிவிருத்தியில் பங்களிப்பு செய்வதற்கு கைக்கோர்க்குமாறு உலக நகரங்கள் தினமான இன்று நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் என்ற வகையில் நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

நகரமயமாக்கலின் நிலையான அபிவிருத்தி நோக்கங்களை அடைவதன் மூலம் அனைவருக்கும் வளமான எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன்.

Related Articles

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பஸ் வண்டி

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசியபாடசாலைக்கான புதிய பஸ் வண்டியினை ஜக்கியமக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்றுவழங்கினார்.பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 79ஆவது பஸ் வண்டியினை பாடசாலையின்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னம் கையளிப்பு

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 1996 ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் கல்லூரியின் நினைவு சின்னமாக ஒரு தொகை பென்ரைவ் இன்று கையளிக்கப்பட்டது.150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் கல்லூரியின்...

மட்டக்களப்பில் ‘புதியதொரு வீடு’ நாடக இறுவெட்டு வெளியீட்டு விழா

'புதிய தொரு வீடு' நாடக இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடக அரங்க ஆசிரியர் கழக அனுசரணையுடன், 'புதிய தொரு வீடு' நாடக...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பஸ் வண்டி

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசியபாடசாலைக்கான புதிய பஸ் வண்டியினை ஜக்கியமக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்றுவழங்கினார்.பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 79ஆவது பஸ் வண்டியினை பாடசாலையின்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னம் கையளிப்பு

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 1996 ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் கல்லூரியின் நினைவு சின்னமாக ஒரு தொகை பென்ரைவ் இன்று கையளிக்கப்பட்டது.150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் கல்லூரியின்...

மட்டக்களப்பில் ‘புதியதொரு வீடு’ நாடக இறுவெட்டு வெளியீட்டு விழா

'புதிய தொரு வீடு' நாடக இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடக அரங்க ஆசிரியர் கழக அனுசரணையுடன், 'புதிய தொரு வீடு' நாடக...

பஸ்யால பகுதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஸ்யால பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையால் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களின்...

தனுஷ்க குணதிலக்கவிற்கு மீண்டும் அணியில் சேர வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.