பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகக்கூடாது என வலியுறுத்தி அலரிமாளிகைக்கு முன்பாக இன்று (09) காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலரிமாளிகைக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அலரிமாளிகைக்குள்ளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
பிரதமர் பதவி விலகக்கூடாது என்பதை வலியுறுத்தி பிரமதரின் ஆதரவாளர்கள் அலரிமாளிகை வரை பேரணி சென்றதுடன் அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.