33 C
Colombo
Tuesday, April 16, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரித்தானியாவுக்கு மேலும் 82 கழிவுக் கொள்கலன்களை திருப்பி அனுப்ப தீர்மானம்!

கொழும்பு, துறைமுகத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மேலும் 82 கழிவுக் கொள்கலன்களை பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக் கை எடுக் கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 65 கொள்கலன்கள், இன்று மாலை 10 கொள்கலன்கள், இன்று இரவு 07 கொள்கலன்கள் என்ற அடிப்படையில் மூன்று கப்பல்களினூடாக அனுப்பப்படும் என சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த கழிவுக் கொள்கலன்களைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்த தரப்பினரை விசாரித்த உடனடியாக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி 20 கழிவுக் கொள்கலன்கள் பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles