பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பள விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள தொகையை வழங்க முடியாவிட்டால், தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு, கம்பனிகள் வெளியேறலாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன தினத்தை முன்னிட்டு கொத்மலை, பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பேதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தேர்தல்களை பிற்போடுவதாக வெளியான தகவல் தொடர்பில் ஊடகவியாலாளர் ஒருவர் எழுபபிய கேள்விக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ம.ராமேஷ்வரன், அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என தெரிவித்தார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன தினத்தை முன்னிட்டு, கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு இன்று பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.