32 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொத்துவிலில் மேலும் இருவருக்கு கொரோனா!

பொத்துவில் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை மேலும் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பிரதேச செயலாளர் இராசரெத்தினம் திரவியராஜ் தெரிவித்தார்.

இதுவரை பொத்துவிலில் ஜந்து தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு கரடியனாறு சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பபட்டிருந்தனர். இந்த இருவருரோடு பொத்துவில் பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 07 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் அப்பகுதிகளில் மக்கள் மத்தியில் பயம் பீதி நிலவுவதுடன் பதட்டமும் அதிகரித்துள்ளது.

அவர்களோடு தொடர்புடைய குடும்பத்தினர் சம்பந்தப்பட்டவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டதோடு பிசிஆர் பரிசோனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

இறுதியாக பிசிஆர் பரிசோதனைசெய்யப்பட்ட 21பேரில் இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்களும் நேற்று(28) கரடியனாற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் பொத்துவில் நகர் பகுதியைச்சேர்ந்தவர்களாவர்.

அவசரக்கூட்டம்

நிலைமையை சுமுகமாகக் கையாள பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் அவசரஅவசரமாக நேற்றே (28) கொவிட்19 தடுப்பு வழிநடாத்தல் குழுவைக்கூட்டினார்.

கூட்டத்தில் சுகாதாரவைத்திய அதிகாரி பிரதேச சபைத் தவிசாளர் பாதுகாப்புத் துறையினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அங்கு மேலும் சில இறுக்கமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

எதிர்வரும் 03தினங்களுக்கு கரைவலை மீன்பிடிக்கு முற்றாக தடைவிதிப்பது.

பொத்துவில் பிரதேசத்துள் வரும் அத்தனை கோட்டல்களிலும் உணவுகளை அங்கு அமர்ந்து உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவை வாங்கிக்கொண்டு போக அனுமதியுண்டு.

பொதுமக்கள் கூட்டம்கூட்டமாக நிற்க அனுமதியில்லை. கடைகளிலும் எந்த இடத்திலும் கூடிநிற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. முப்படையினர் உசாராக வைக்கப்பட்டுள்ளனர்.

தேவையில்லாமல் பொதுமக்கள் விட்டைவிட்டு வெளியேறக்கூடாது. அநாவசியமாக சிறுவாகள் வயோதிபர்கள வீதிகளில் நடமாடுவதைத் தவிர்க்கவேண்டும். ஆட்டோவில் இருவர் மாத்திரமே பயணிக்கவேண்டும்.

பொத்துவில் பிரதேசத்தில் கொரோனாத்தொற்றுக் காரணமாக சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்கள் தங்கியுள்ள வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் அவர்களின் தகவல்களைப்பெற்று தேவையான உணவு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

களியாட்டம் மற்றும் ஒன்று கூடல் திருமண நிகழ்வுகளைத் தவிர்த்தல் வேண்டும்.

கொரோனாத் தடுப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் பொதுச்சுகாதார பணியாளர்கள் கிராம உத்தியோகத்தர்கள் பாதுகாப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தேவையாள ஒத்துழைப்பை வழங்குதல்.

மரண வீடுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட வேண்டும். விளையாட்டு நிகழ்ச்சிகளை விழாக்களைத் தவிர்த்தல் அவசியம்.
வெளியூரிலிருந்து வருவோர் மற்றும் வியாபாத்திற்கு வருவோரினதும் விபரம் பதியப்பட்ட பிற்பாடே அனுமதிக்கப்படவேண்டும்.

கருத்தரங்கு கூட்டம் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

பொது வெளிகளில் முகக்கவசம் அணியாமல் விடுவதும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

Related Articles

ரமழான் நோன்புக்கு இலவச கோதுமை மாவுக்கு மக்கள் மோதல்: 4 பேர் பலி

ரமழான் நோன்பு கடைப்பிடித்து வரும் பாகிஸ்தானில் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கோதுமை மாவு வழங்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவரின் இறுதிக்கிரியை

அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவரும் சுவாட் அமைப்பின் தலைவருமான வ.பரமசிங்கம் நேற்றிரவு விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது இறுதிக் கிரியைகள்இன்று இடம்பெற்றன.கடமையின் நிமித்தம் கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது,...

சுகாதார விதிகளை மீறி உணவு விற்பனை:வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

அம்பாறை கல்முனையில், னித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்த 3 உணவகங்களுக்கு தண்டப்பணம்விதிக்கப்பட்டுள்ளது.சுகாதார விதிமுறை மீறிய உணவங்கள் தொடர்பான வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ரமழான் நோன்புக்கு இலவச கோதுமை மாவுக்கு மக்கள் மோதல்: 4 பேர் பலி

ரமழான் நோன்பு கடைப்பிடித்து வரும் பாகிஸ்தானில் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கோதுமை மாவு வழங்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவரின் இறுதிக்கிரியை

அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவரும் சுவாட் அமைப்பின் தலைவருமான வ.பரமசிங்கம் நேற்றிரவு விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது இறுதிக் கிரியைகள்இன்று இடம்பெற்றன.கடமையின் நிமித்தம் கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது,...

சுகாதார விதிகளை மீறி உணவு விற்பனை:வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

அம்பாறை கல்முனையில், னித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்த 3 உணவகங்களுக்கு தண்டப்பணம்விதிக்கப்பட்டுள்ளது.சுகாதார விதிமுறை மீறிய உணவங்கள் தொடர்பான வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில்...

சிலியில் முதன்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பரவல்

தெற்கு அமெரிக்க நாடான சிலி மாகாணத்தில் முதல் முறையாக மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட...

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு – இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகளை; கலைக்கும் இராணுவ ஆட்சியாளர்களின் முடிவை அவுஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயக தலைவர்...