27 C
Colombo
Tuesday, October 3, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

போதியளவு ஆய்வு கூட வசதிகள் இன்மையால் நெருக்கடி!

போதியளவு ஆய்வு கூட வசதிகள் இல்லாததன் காரணமாக கொவிட் நோயாளிகள் என சந்தேகிக்கப்பட்ட பத்தாயிரம் பேரிடமிருந்து சேகரிக்கப்பட்ட பிசிஆர் மாதிரிகளை சோதனைக்குட்படுத்தி வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது என சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
நான்கு மருத்துவமனைகள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளதால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன என சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த துரதிஸ்ட நிலை காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் 2145 மாதிரிகளும்,அனுராதபுரம் வைத்தியசாலையில் 1500 மாதிரிகளும் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 1800 பிசிஆர் மாதிரிகளும்,மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தில் 4500 மாதிரிகளும் குவிந்துகிடக்கின்றன என சிலோன் டுடே தெரிவித்துள்ளது.
கராப்பிட்டிய வைத்தியசாலையின் குளிரூட்டல் வசதிகள் பிசிஆர் மாதிரிகளை வைத்திருப்பதற்கு போதுமானவையல்ல எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை மேற்கோள்காட்டி சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக நாளாந்தம் பெறப்படும் மாதிரிகைள மருத்துவமனையின் வேறொரு அறையில் சேமிக்கவேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையின் பணியாளர்கள் தொடர்ச்சியாக பணியாற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், பிசிஆர் மாதிரிகளை ஆராயவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பெருமளவானவர்கள் கொரோனா வைரசின் பிடியில் சிக்கும் ஆபத்தை தவிர்க்கவேண்டும் என்றால் அரசாங்கம் மருத்துவமனைகளில் பிசிஆர் மாதிரிகளை ஆராய்வதற்கான வசதிகளை உடனடியாக அதிகரிக்கவேண்டும் என மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.

Related Articles

சீரற்ற வானிலை காரணமாக 25863 பேர் பாதிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்த...

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே இருபத்தாறு...

முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு தொடர்கிறது

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சீரற்ற வானிலை காரணமாக 25863 பேர் பாதிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்த...

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடியே இருபத்தாறு...

முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு தொடர்கிறது

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

யாழில், நாளை மனித சங்கிலி ஆர்பாட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள மனித சங்கிலி ஆர்பாட்டம் வெற்றி அளிப்பதற்கு, தமிழ் மக்கள் தங்கள்...

இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.அதன்படி இன்று கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் '22 கெரட்' தங்கத்தின் விலை 153,000 ரூபாவாக குறைந்துள்ளது.இது,...