28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

போராட்டத்தின் முன்னணி தலைவரான சேனாதி குருகே விளக்கமறியலில்

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி தலைவர் என கூறப்படும் சேனாதி குருகேவை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சந்தேக நபரை அடையாள அணிவகுப்பிற்கு ஆஜர்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி, குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் அவரை அடையாள அணிவகுப்பிற்கு ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles