26 C
Colombo
Tuesday, March 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

போலிச் செய்திகளைப் பரப்பினால் 5 வருடங்கள் சிறை – அஜித் ரோஹண

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் போது போலிச் செய்திகளைப் பரப்பினால் ஐந்து வருடங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல், நடவடிக்கைகளின் போது எவரேனும் ஒருவர் அவருடைய பெயர் அல்லது முகவரி தொடர்பில் தவறான விவரங்களை வழங்கினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்.

இதேவேளை, தன்னைப் பிறிதொரு நபரைப் போன்று அடையாளப்படுத்தினாலும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும். இது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய குற்றச்செயலாகும். பிறிதொரு நபராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் போது அங்கே மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்ற முடிவுக்கு வரமுடியும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது சந்தேக நபர்களால் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படுவதால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை நிரூபிக்கவும் உரிய ஆதாரங்கள் எம்மிடம் இருக்கும். அதற்கமைய மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவரை ஐந்து வருடங்கள் வரை சிறைவைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

Related Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

கொழும்பில் இன்று நேர்ந்த பரிதாப மரணம்!

கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் சேவையில் ஈடுபட்டிருந்த போது, மலசலகூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (27) பிற்பகல் கொழும்பு, கொட்டாஞ்சேனை...

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில், வைர விழா

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைர விழா, சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. வைர விழாவை முன்னிட்டு, இன்று காலை 9.00 மணிக்கு, கல்லூரி மைதானத்தில், மலர் வெளியீடு...