மக்களின் கருத்தறிய கோடிகளை செலவழிக்கும் அரசியல் கட்சிகள்!

0
58
மக்களின் கருத்தைப் பெறுவதற்காக மூன்று முக்கிய அரசியல் கட்சிகள், ஆய்வு நிறுவனங்களுக்கு, சமீபத்தில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
சில ஆய்வு நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது ஆய்வு அறிக்கைகளை அந்தந்த அரசியல் கட்சிகளிடம் சமர்ப்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனஇந்த நாட்களில் மூன்று ஆய்வு ஏஜென்சிகள் கணக்கெடுப்பு நடத்தி வருவதாக தெரிய வருகிறது
பொதுமக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை திட்டமிடுவதே இந்த கணக்கெடுப்பின் நோக்கம் என அரசியல் கட்சி பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் மேடைகளில் சாதகமான கணக்கெடுப்பு அறிக்கைகளை முன்வைத்து அரசியல் ஆதாயம் பெறுவதும் இதன் மற்றொரு நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.