ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் இதுவரை 6 முறைப்பாடுகள் தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
அரச உத்தியோகத்தர்களது இடமாற்றம் தொடர்பாக நான்கு முறைப்பாடுகளும், தேர்தல் ஊர்வலம் தொடர்பாக ஒரு முறைப்பாடும், காணி பகிர்ந்தளித்தல் தொடர்பாக மற்றுமொரு முறைப்பாடும் பதிவாகியுள்ளன.
இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதி மீறல் குற்றத்தின் அடிப்படையில் சாதாரண தரமுடையவை எனவும், இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.