மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயான்குடா வயற் பிரதேசத்தில் நேற்று மாலை மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் என்பவரே உயிரிழந்தவராவர்.
வயலில் வரம்பு கட்டிக் கொண்டிருந்த வேளை மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளார்.
ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் கரடியனாறு பொலிஸாருடன் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டு
விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.