சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு,மட்டக்களப்பு சிறைச்சாலையில், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் 16 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் சிறைக்கைதிகளை விடுதலைசெய்யும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
சிறு குற்றங்களுக்காக சிறைதண்டனை அனுபவித்து வந்த மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாது சிறைவாசம் அனுபவித்த கைதிகளில், பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களே விடுதலை செய்யப்பட்டனர்.