28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை, ஆசிரியர்கள் போராட்டத்தில்!

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசியப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், இன்று பிற்பகல், பாடசாலை நிறைவடைந்ததும், பாடசாலை
முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரிய இடமாற்றம் தொடர்பில் ஆட்சேபனைகளைத் தெரிவித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தேசிய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, மாகாண சபையின் கீழ் இயங்கும் நிர்வாகங்கள்
இடமாற்றங்களை வழங்குவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.
தேசிய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தை, பிறிதொரு தேசியப் பாடசாலைக்கே வழங்க வேண்டும்
என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்ட இடத்திற்கு வருகை தந்த பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன், போராட்டக்காரர்களோடு உரையாடியிருந்தார்.
பட்டிருப்பு தேசியப் பாடசாலை முன்றலில் இடம்பெற்ற போராட்டத்தைக் கண்டித்து, பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு
முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்களது கல்வியை சீர்குலைக்கும் வகையில் நாசகார செயல்களை வெளியிலிருந்து முன்னெடுக்காதீர், போன்ற பல வாசகங்களை எழுதிய பதாகைகளையும்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles