மட்டக்களப்பு பாசிக்குடா முனைமுருகன் கோவில் வீதி, புனரமைக்கப்பட்டு, திறந்து வைப்பு

0
105

மட்டக்களப்பு பாசிக்குடா முனைமுருகன் கோவில் வீதி, புனரமைக்கப்பட்டு, போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.


இவ் வீதியானது 1.54 கிலோமீற்றர் தூரமுடையதாகும்.
இராஜங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் துரித முயற்சியினால் இவ் வீதி புனரமைப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.