மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தின நிகழ்வு கோலாகலமாக இன்று கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பட்டில் கல்லூரியின் அதிபர் அன்ரனி பெனடிக் ஜோசப் தலைமையில் இடம்பெற்ற கல்லூரியின் 150வது கல்லூரி தின நிகழ்வில் மாணவர்களினால் அதிதிகள் வரவேற்புடன், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல் ஆண்டகை இணைந்து விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து புனித மிக்கேல் கல்லூரியின் ஸ்தாபகர், கல்லூரி முன்னால் மறைந்த அதிபர்கள், மறைந்த அருட்தந்தையர்களை கௌரவ பட்டுத்தும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து கல்லூரி கொடியேற்றப்பட்டு கல்லூரி தின நினைவுறைகள் இடம்பெற்றன.
புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில் கல்லூரியின் 150வது ஆண்டு நினைவு முத்திரை ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், கல்லூரி வரலாற்று நினைவு நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.